கொரோனா (COVID-19) வருகைக்குப் பின் வீட்டில் ஆள்களை அரசுகள் முடக்கிவைத்தது. நம்மாளுங்க இணைய வழியில் உலகைச் சுற்றிக்கொண்டே இருந்தாங்க. அதாவது ZOOM, Cisco Webex, Meet.Jit.Si, Google Meet, Microsoft Teams, Lifesize, Eztalks, Teamlink எனப் பல காணொளி (ஒளிஒலி) உரையாடல் செயலி ஊடாக இணையவழிக் கருத்தரங்குகள் நடாத்தி நம்மாளுங்க தம் அறிவாற்றலைப் பகிர்ந்த வண்ணம் வாழப் பழகிட்டாங்க.
அவ்வாறான இணையவழிக் கருத்தரங்குகள் போன்றே "கவிதை அரங்கேறும் நேரம்!" என்ற நிகழ்வை நடாத்திப் பன்னாட்டுக் கவிஞர்களுக்குக் களம் அமைத்துத்தர யாழ்பாவாணன் கலைப்பணி மன்றம் முன்வருகின்றது. "தமிழரின் பலம் ஒற்றுமை தான்!" என்ற தலைப்பில் மரபுக் கவிதை அல்லது புதுக் கவிதை எதுவாயினும் மூன்று மணித்துளி (3 minute) நேரத்தில் வாசிக்கத் தக்கதாக இருக்கவேண்டும். சமகாலச் சூழலை உள்ளத்தில் இருத்தி மேற்படி தலைப்பிலான கவிதைகளை எல்லோரும் எழுதி அனுப்பலாம். முடிவு நாள் : 30/12/2020, முடிவு நாள் நீடிக்கப்பட மாட்டாது.
தங்கள் கவிதைகளை அனுப்ப விரும்புவோர் PP Size Photo, பெயர், முகவரி ஆகியவற்றுடன் wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். எல்லோரும் பங்கேற்கலாம்; எல்லோருக்கும் பகிர்ந்து உதவுங்கள். எமக்குக் கிடைத்த கவிதைகளை "யாழ்பாவாணன் வெளியீட்டகம்" ஊடாக மின்நூலாக்கி வெளியிட்டு உதவுவோம். கவிதைகள் எமக்குக் கிடைத்த ஒழுங்கில் "கவிதை அரங்கேறும் நேரம்!" என்ற நிகழ்வில் கவிஞர்களைச் சேர்த்துக்கொள்வோம். விரைவாக உங்கள் சிறந்த கவிதைகளை அனுப்பி உதவுங்கள்; பன்னாட்டுக் கவிஞர்களுடன் கவிதை வாசிக்கலாம்.
குறிப்பு:-
2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் (https://seebooks4u.blogspot.com/2018/01/2018-2.html) அறிவிப்பின் அறுவடையாக "இது தான் காதலா?" மின்நூல் அடுத்த வாரம் வெளிவரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
நல்லது, கெட்டது எதுவானாலும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவும்.