சனி, 23 டிசம்பர், 2017

2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்


வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "மதுவை விரட்டினால் கோடி நன்மை!" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இம்மின்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து 31/12/2017 இற்கு முன்னதாக எதிர்பார்க்கின்றோம்.

ஏற்கனவே, இம்மின்நூல் வெளியீடு பற்றி கீழ்வரும் இணைப்புகளில் அறிவித்துவிட்டோம். கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன.


மதுவினால் உடல் நலம், மக்கள் நலம், நாட்டு நலம் கெடுமென்றும் மதுவினால் சீர்கெட்ட நிலைமைகளைச் சுட்டிக்காட்டியும் நன்மை கருதி மதுவை விலக்கி வையென்றும் வெளிப்படுத்தும் கவிதைகளை 10 - 20 வரிகளில் 31/12/2017 இற்கு முன்னதாக எழுதி அனுப்பலாம்.

தாங்கள் விரும்பிய தலைப்பில் முன்கூட்டியே எழுதிய பதிவாகவோ புதிதாக எழுதிய பதிவாகவோ இருந்தாலும் வலைப்பதிவர்கள் தங்கள் பதிவுகளை wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு MS-Word File ஆக Latha Unicode Font இல் தட்டச்சுச் செய்து அனுப்பிவைக்க வேண்டும். பதிவுகள் யாவும் 10 - 20 வரிக் கவிதைகளாக (மரபுக் கவிதையாகவோ புதுக் கவிதையாகவோ) சொந்தப் படைப்பென உறுதிப்படுத்தி 31/12/2017 இற்கு முன்னதாக அனுப்ப வேண்டும்.

"License: Creative Commons Attribution-ShareAlike 4.0 International உரிமம் – கிரியேட்டிவ் கொமன்ஸ் காரணமறிவு - எல்லோரும் படிக்கலாம்; பகிரலாம்." என்ற உடன்பாட்டின் படி யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளியிடும் "மதுவை விரட்டினால் கோடி நன்மை!" என்ற அன்பளிப்பு (இலவச) மின்நூலில் எனது பதிவு இடம்பெற அனுமதியளிப்பதோடு ஒத்துழைப்பு வழங்குகிறேன் எனப் பதிவினை அனுப்பும் மின்னஞ்சலில் குறிப்பிடவேண்டும்.

மின்னஞ்சலுக்கான தலைப்பு (Subject) '2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்' என்றவாறு இருக்க வேண்டும். அத்துடன் பதிவை அனுப்பும் வலைப்பதிவர் PP Size அளவான முகம் அளவு படத்துடன் சொந்தப் பெயர், புனைப்பெயர், மின்னஞ்சல் முகவரி, நடைபேசி எண், வலைப்பக்க முகவரி என்பன அனுப்ப வேண்டும். குறித்த மின்நூலில் தங்களை அறிமுகப்படுத்த அதுவே பயன்படும்.

சிறந்த மூன்று பதிவுகளுக்குப் பரிசில் வழங்குகின்றோம். Dicovery Book Palace (கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com இல் இந்திய உரூபா 500/= இற்கு நூல்கள் வேண்டுவதற்கான வெகுமதித் தாள்கள் (Gift Certificates) பரிசு பெறும் மூவருக்கும் தனித்தனியே வழங்கப்படும். இம்மின்நூல் வெளியீட்டிற்கான பரிசில்களை 31/01/2018 இற்கு முன்னதாக அனுப்பி வைக்கப்படும்.

உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.
தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி,
யாழ்பாவாணன் வெளியீட்டகம்.

வியாழன், 21 டிசம்பர், 2017

வாசிப்புப் போட்டி - 2017 தேர்வு மதிப்பீடு

வலைவழி வாசிப்புப் போட்டி என்பது இலகுவானதல்ல. நூல்களை வாசித்து வினாக்களுக்கான விடைகளை அந்நூல்களில் இருந்து பொறுக்கி எமக்கு அனுப்பிவைக்க வேண்டும். இந்த முயற்சியில் இறங்குவோர், வாசிப்பைச் சரியாக மேற்கொள்ள வேண்டும்.

உலகெங்கும் தமிழ் பேசும் மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க, வாசிப்பு மாதமாகிய ஐப்பசி (Oct) இல் அறிவித்து நடாத்தப்பட்ட "வாசிப்புப் போட்டி - 2017" இற்கான முடிவுரையை இப்பகுதியில் தருகின்றேன். இப்போட்டியில் நிறைவடையத்தக்க வகையில் பதில் கிடைக்காத போதும் (அதாவது, நூல்களை வாசித்து நூலாசிரியர்களின் பதிலைத் தொகுத்துத் தரமுடியாமை), கிடைத்த பதில் தொகுப்புகளில் ஒருவரை மகிழ்வோடு தெரிவு செய்துள்ளோம்.

அதாவது, நிறைவாக நூல்களை வாசித்துப் பதில் தந்த அவரை மதிப்பளிக்க விரும்புகிறோம். அவரது விரிப்பைக் கீழே தருகின்றோம்.. இனிய வலைவழி உறவுகளே, நீங்களும் அவரை வாழ்த்தி மதிப்பளித்து உதவுமாறு வேண்டி நிற்கின்றோம். நாமும் அவருக்கு Dicovery Book Palace (கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com இல் இந்திய உரூபா 640/= இற்கு நூல்கள் வேண்டுவதற்கான Gift Certificate ஒன்றை 01/01/2018 இற்கு முன்னதாக அனுப்பிவைப்போம்.

வாசிப்புப் போட்டி - 2017 இன் வெற்றியாளர்
சொந்தப் பெயர் - த.அபிநயா
முகவரி
பழைய எண் 50, புது எண் 84,
கப்பல் போலு தெரு,
பழைய வண்ணாரப்பேட்டை,
சென்னை – 600021

போட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளும் நூலாசிரியர்களின் பதில்களும் கீழே தருகின்றோம்.

"செம்மொழியாம் தமிழைக் காப்போம்" என்ற நூலில் இருந்து...

1. எட்டுச் செம்மொழிகளின் பெயர்களையும் தருக? அவற்றில் இன்றுவரை வாழும் மொழிகளையும் வேறாகத் தருக?

2. தமிழைச் செவ்வியல் மொழியென்பதா? தமிழைச் செம்மொழி என்பதா? இதில் சரியானது எது? விளக்குக.

3. ஒரு மொழியைச் செம்மொழி என்றுரைப்பது பற்றி ஜார்ஜ் ஹர்ட் எவ்வாறு கருதுகிறார்?

4. இந்தியாவில் கன்னடர்கள் தமிழர்களாக இருந்த காலம்; தெலுங்கர்கள் தமிழர்களாக இருந்த காலம்; மலையாளிகள் தமிழர்களாக இருந்த காலம் ஆகியவற்றைக் குறிப்பிடுக?

"உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி" என்ற நூலில் இருந்து...


5. சமஸ்கிரத மொழியை விடத் தமிழ் முந்திய மொழி எனக் கருதப்படுகிறது. அது பற்றிய குறிப்பைத் தருக?


6. தமிழின் பெருமை தமிழராலும் அறியப்படாமல் இருப்பதற்குப் பத்துச் சாட்டுகள் உள்ளன. அவற்றை விவரிக்க?


7. "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடி" என்றுரைக்கும் பாடலும் பாடியவர் பெயரும் தருக?


8. குமரிக்கண்டம் தொடர்பான கருத்துக்குச் சிலப்பதிகாரம், தொல்காப்பியம் கூறும் விளக்கமென்ன?

9. பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் கூறும் குமரிக்கண்டம் எல்லைகளை விளக்கு?


10. 2000 ஆம் ஆண்டில் இலங்கை வானொலி கூறிய தகவற் படி உலக மொழிகளின் எண்ணிகை எவ்வாறு மாறும்?

இங்கு பயன்படுத்தப்பட்ட நூல்களைப் பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

இவ்வாறான 'வாசிப்புப் போட்டி - 2017' வாசிப்பு மாதமாகிய வரும் ஐப்பசி (Oct) மாதம் அறிவிக்கப்படும். இம்முறை போட்டியில் கலந்துகொள்ளத் தவறியோர், அடுத்த முறை போட்டியில் பங்குபற்றி உலகெங்கும் தமிழ் பேசும் மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க இணையுமாறு பணிவோடு அழைக்கின்றோம்.

யாழ்பாவாணன் வெளியீட்டகம்
யாழ் மென்பொருள் தீர்வுகள்

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

வாசிப்புப் போட்டி - 2017 தேர்வுக் கேள்விகள்

https://seebooks4u.blogspot.com/2017/10/2017.html என்ற இணைப்பில் வெளியிடப்பட்ட பதிவின் வழிகாட்டலின் படி வாசிப்புப் போட்டி - 2017 இற்கான கேள்விகளுக்கு நிறைவான பதிலை அனுப்பி வெற்றி பெறுங்கள்.

மேற்காணும் இணைப்புகளைச் சொடுக்கி மின்நூல்களைப் பதிவிறக்கிப் படியுங்கள்.

இங்கு பத்துத் தேர்வுக் கேள்விகள் தரப்படுகிறது. பொத்தகங்களைப் படித்து; பொத்தகங்களில் உள்ளவாறு பதிலைத் தயாரித்து அனுப்பலாம். விடைகள் 48 மணி நேரம் கழித்து இத்தளத்தில் வெளியிடப்படும்.

"செம்மொழியாம் தமிழைக் காப்போம்" என்ற நூலில் இருந்து...
1. எட்டுச் செம்மொழிகளின் பெயர்களையும் தருக? அவற்றில் இன்றுவரை வாழும் மொழிகளையும் வேறாகத் தருக?
2. தமிழைச் செவ்வியல் மொழியென்பதா? தமிழைச் செம்மொழி என்பதா? இதில் சரியானது எது? விளக்குக.
3. ஒரு மொழியைச் செம்மொழி என்றுரைப்பது பற்றி ஜார்ஜ் ஹர்ட் எவ்வாறு கருதுகிறார்?
4. இந்தியாவில் கன்னடர்கள் தமிழர்களாக இருந்த காலம்; தெலுங்கர்கள் தமிழர்களாக இருந்த காலம்; மலையாளிகள் தமிழர்களாக இருந்த காலம் ஆகியவற்றைக் குறிப்பிடுக?

"உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி" என்ற நூலில் இருந்து...
5. சமஸ்கிரத மொழியை விடத் தமிழ் முந்திய மொழி எனக் கருதப்படுகிறது. அது பற்றிய குறிப்பைத் தருக?
6. தமிழின் பெருமை தமிழராலும் அறியப்படாமல் இருப்பதற்குப் பத்துச் சாட்டுகள் உள்ளன. அவற்றை விவரிக்க?
7. "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடி" என்றுரைக்கும் பாடலும் பாடியவர் பெயரும் தருக?
8. குமரிக்கண்டம் தொடர்பான கருத்துக்குச் சிலப்பதிகாரம், தொல்காப்பியம் கூறும் விளக்கமென்ன?
9. பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் கூறும் குமரிக்கண்டம் எல்லைகளை விளக்கு?
10. 2000 ஆம் ஆண்டில் இலங்கை வானொலி கூறிய தகவற் படி உலக மொழிகளின் எண்ணிகை எவ்வாறு மாறும்?

பதில் வழங்குவோர் 48 மணி நேரத்திற்குள் yarlpavanang1@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு subject இல் "வாசிப்புப் போட்டி - 2017" எனத் தட்டச்சுச் செய்து, கேள்விகளுக்கான சரியான பதில், போட்டியாளரின் சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை அனுப்பவும்.

போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற வாழ்த்துகள்!