வலைவழி வாசிப்புப் போட்டி
என்பது இலகுவானதல்ல. நூல்களை வாசித்து வினாக்களுக்கான விடைகளை அந்நூல்களில் இருந்து
பொறுக்கி எமக்கு அனுப்பிவைக்க வேண்டும். இந்த முயற்சியில் இறங்குவோர், வாசிப்பைச் சரியாக
மேற்கொள்ள வேண்டும்.
உலகெங்கும் தமிழ் பேசும்
மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க, வாசிப்பு மாதமாகிய ஐப்பசி (Oct) இல் அறிவித்து
நடாத்தப்பட்ட "வாசிப்புப் போட்டி - 2017" இற்கான முடிவுரையை இப்பகுதியில்
தருகின்றேன். இப்போட்டியில் நிறைவடையத்தக்க வகையில் பதில் கிடைக்காத போதும் (அதாவது,
நூல்களை வாசித்து நூலாசிரியர்களின் பதிலைத் தொகுத்துத் தரமுடியாமை), கிடைத்த பதில்
தொகுப்புகளில் ஒருவரை மகிழ்வோடு தெரிவு செய்துள்ளோம்.
அதாவது, நிறைவாக நூல்களை
வாசித்துப் பதில் தந்த அவரை மதிப்பளிக்க விரும்புகிறோம். அவரது விரிப்பைக் கீழே தருகின்றோம்..
இனிய வலைவழி உறவுகளே, நீங்களும் அவரை வாழ்த்தி மதிப்பளித்து உதவுமாறு வேண்டி நிற்கின்றோம்.
நாமும் அவருக்கு Dicovery Book Palace
(கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com
இல் இந்திய உரூபா 640/= இற்கு நூல்கள்
வேண்டுவதற்கான Gift Certificate ஒன்றை
01/01/2018 இற்கு முன்னதாக அனுப்பிவைப்போம்.
வாசிப்புப் போட்டி - 2017 இன் வெற்றியாளர்
சொந்தப் பெயர் - த.அபிநயா
முகவரி
பழைய எண் 50, புது எண் 84,
கப்பல் போலு தெரு,
பழைய வண்ணாரப்பேட்டை,
சென்னை – 600021
போட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளும் நூலாசிரியர்களின் பதில்களும்
கீழே தருகின்றோம்.
"செம்மொழியாம்
தமிழைக் காப்போம்" என்ற நூலில் இருந்து...
1. எட்டுச் செம்மொழிகளின்
பெயர்களையும் தருக? அவற்றில் இன்றுவரை வாழும் மொழிகளையும் வேறாகத் தருக?
2. தமிழைச் செவ்வியல் மொழியென்பதா?
தமிழைச் செம்மொழி என்பதா? இதில் சரியானது எது? விளக்குக.
3. ஒரு மொழியைச் செம்மொழி
என்றுரைப்பது பற்றி ஜார்ஜ் ஹர்ட் எவ்வாறு கருதுகிறார்?
4. இந்தியாவில் கன்னடர்கள்
தமிழர்களாக இருந்த காலம்; தெலுங்கர்கள் தமிழர்களாக இருந்த காலம்; மலையாளிகள் தமிழர்களாக
இருந்த காலம் ஆகியவற்றைக் குறிப்பிடுக?
"உலகில்
முதல் தோன்றியது தமிழ் மொழி" என்ற நூலில் இருந்து...
5. சமஸ்கிரத மொழியை விடத்
தமிழ் முந்திய மொழி எனக் கருதப்படுகிறது. அது பற்றிய குறிப்பைத் தருக?
6. தமிழின் பெருமை தமிழராலும்
அறியப்படாமல் இருப்பதற்குப் பத்துச் சாட்டுகள் உள்ளன. அவற்றை விவரிக்க?
7. "கல் தோன்றி மண்
தோன்றாக் காலத்து மூத்த குடி" என்றுரைக்கும் பாடலும் பாடியவர் பெயரும் தருக?
8. குமரிக்கண்டம் தொடர்பான
கருத்துக்குச் சிலப்பதிகாரம், தொல்காப்பியம் கூறும் விளக்கமென்ன?
9. பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார்
கூறும் குமரிக்கண்டம் எல்லைகளை விளக்கு?
10. 2000 ஆம் ஆண்டில் இலங்கை
வானொலி கூறிய தகவற் படி உலக மொழிகளின் எண்ணிகை எவ்வாறு மாறும்?
இங்கு பயன்படுத்தப்பட்ட
நூல்களைப் பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
இவ்வாறான 'வாசிப்புப் போட்டி
- 2017' வாசிப்பு மாதமாகிய வரும் ஐப்பசி (Oct) மாதம் அறிவிக்கப்படும். இம்முறை போட்டியில்
கலந்துகொள்ளத் தவறியோர், அடுத்த முறை போட்டியில் பங்குபற்றி உலகெங்கும் தமிழ் பேசும்
மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க இணையுமாறு பணிவோடு அழைக்கின்றோம்.
யாழ்பாவாணன் வெளியீட்டகம்
யாழ் மென்பொருள் தீர்வுகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
நல்லது, கெட்டது எதுவானாலும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவும்.