சனி, 23 டிசம்பர், 2017

2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்


வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "மதுவை விரட்டினால் கோடி நன்மை!" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இம்மின்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து 31/12/2017 இற்கு முன்னதாக எதிர்பார்க்கின்றோம்.

ஏற்கனவே, இம்மின்நூல் வெளியீடு பற்றி கீழ்வரும் இணைப்புகளில் அறிவித்துவிட்டோம். கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன.


மதுவினால் உடல் நலம், மக்கள் நலம், நாட்டு நலம் கெடுமென்றும் மதுவினால் சீர்கெட்ட நிலைமைகளைச் சுட்டிக்காட்டியும் நன்மை கருதி மதுவை விலக்கி வையென்றும் வெளிப்படுத்தும் கவிதைகளை 10 - 20 வரிகளில் 31/12/2017 இற்கு முன்னதாக எழுதி அனுப்பலாம்.

தாங்கள் விரும்பிய தலைப்பில் முன்கூட்டியே எழுதிய பதிவாகவோ புதிதாக எழுதிய பதிவாகவோ இருந்தாலும் வலைப்பதிவர்கள் தங்கள் பதிவுகளை wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு MS-Word File ஆக Latha Unicode Font இல் தட்டச்சுச் செய்து அனுப்பிவைக்க வேண்டும். பதிவுகள் யாவும் 10 - 20 வரிக் கவிதைகளாக (மரபுக் கவிதையாகவோ புதுக் கவிதையாகவோ) சொந்தப் படைப்பென உறுதிப்படுத்தி 31/12/2017 இற்கு முன்னதாக அனுப்ப வேண்டும்.

"License: Creative Commons Attribution-ShareAlike 4.0 International உரிமம் – கிரியேட்டிவ் கொமன்ஸ் காரணமறிவு - எல்லோரும் படிக்கலாம்; பகிரலாம்." என்ற உடன்பாட்டின் படி யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளியிடும் "மதுவை விரட்டினால் கோடி நன்மை!" என்ற அன்பளிப்பு (இலவச) மின்நூலில் எனது பதிவு இடம்பெற அனுமதியளிப்பதோடு ஒத்துழைப்பு வழங்குகிறேன் எனப் பதிவினை அனுப்பும் மின்னஞ்சலில் குறிப்பிடவேண்டும்.

மின்னஞ்சலுக்கான தலைப்பு (Subject) '2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்' என்றவாறு இருக்க வேண்டும். அத்துடன் பதிவை அனுப்பும் வலைப்பதிவர் PP Size அளவான முகம் அளவு படத்துடன் சொந்தப் பெயர், புனைப்பெயர், மின்னஞ்சல் முகவரி, நடைபேசி எண், வலைப்பக்க முகவரி என்பன அனுப்ப வேண்டும். குறித்த மின்நூலில் தங்களை அறிமுகப்படுத்த அதுவே பயன்படும்.

சிறந்த மூன்று பதிவுகளுக்குப் பரிசில் வழங்குகின்றோம். Dicovery Book Palace (கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com இல் இந்திய உரூபா 500/= இற்கு நூல்கள் வேண்டுவதற்கான வெகுமதித் தாள்கள் (Gift Certificates) பரிசு பெறும் மூவருக்கும் தனித்தனியே வழங்கப்படும். இம்மின்நூல் வெளியீட்டிற்கான பரிசில்களை 31/01/2018 இற்கு முன்னதாக அனுப்பி வைக்கப்படும்.

உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.
தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி,
யாழ்பாவாணன் வெளியீட்டகம்.

2 கருத்துகள்:

நல்லது, கெட்டது எதுவானாலும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவும்.